ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் விறுவிறு... 5 முனை போட்டி உறுதி!
ஆர்.கே நகர் தொகுதிக்கான தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில் தற்போதைய சூழலில் அங்கு 5 கட்சிகள் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகர் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ள நிலையில் தற்போதைய அரசியல் சூழலில் அங்கு 5 முனை போட்டி உறுதியாகத் தெரிகிறது.
ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு கடந்த 11 மாதங்களாக சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி காலியாக உள்ளது. இந்த தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட தேர்தலும் பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இடைத்தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் டிசம்பர் 31ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டனர். இந்நிலையில் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கின
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து ஆர்.கே நகர்த் தொகுதியில் தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளன. இடைத்தேர்தல் அதிகாரியாக ஆதிதிராவிடர் நலத்துறை இணை இயக்குனர் வேலுச்சாமி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் ஆர்.கே நகர்த் தொகுதிக்குள் வைக்கப்பட்டுள்ள அரசு விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளன. அரசு மற்றும தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சியினரோ அல்லது பொதுமக்களோ சுவர் விளம்பரங்கள் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் யார்?
இதனிடையே இடைத்தேர்தலில் பிரதான கட்சியான அதிமுக இரட்டை இலை சின்னத்தை பெற்ற மகிழ்ச்சியுடன் களமிறங்குகிறது. அந்தக் கட்சியின் வேட்பாளர் யார் என்பதை ஆட்சி மன்றக் குழு அறிவிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதே போன்று திமுக வேட்பாளரை தேர்வு செய்வதற்கான திமுகவின் கூட்டமும் நடைபெற்று வருகிறது. திமுகவிற்கு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், பெருந்தலைவர் காமராஜர் கட்சி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டிடிவி தினகரன் சுயேட்சை வேட்பாளர்
இரட்டை இலை சின்னத்தை பறி கொடுத்த டிடிவி தினகரனும் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். எனவே அவர் சுயேட்சை வேட்பாளராக களமிறங்குவார் என்று தெரிகிறது. பாஜக வேட்பாளர் குறித்து தேர்தல் பணிக்குழு முடிவு செய்யும் என்று மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

5 முனை போட்டி உருவாகியுள்ளது
நாம் தமிழர் கட்சியும் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளது. எனவே தற்போதைய சூழலில் 5 முனை போட்டி உருவாகியுள்ளது. தேமுதிக இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி,பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தங்களது முடிவை அறிவிக்காததால் அந்தக் கட்சிகளும் களத்தில் இறங்கினால் போட்டி மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications