சென்னை உதவி ஐ.ஜி.யாக ஆஸ்ரா கார்க் நியமனம்

Subscribe to Oneindia Tamil

Asra Gark IPS appoints assistant of IG
சென்னை: போலீஸ் நிர்வாகப் பிரிவு உதவி ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இப்பதவியில் இருந்துவந்த பி.கே.செந்தில்குமாரி ஐ.பி.எஸ். வேலூர் மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா ஐ.ஏ.எஸ். வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டு இருந்த மதுரை மாவட்ட முன்னாள் போலீஸ் எஸ்.பி. ஆஸ்ரா கர்க்குக்கு, தமிழக அரசு மீண்டும் பதவி வழங்கியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக சகாயம் இருந்தபோது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஆஸ்ரா கர்க் இருந்தார். இருவரும் கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததையடுத்து அதிரடியாக மாற்றப்பட்டனர். திருப்பூர் எஸ்.பியாக பணியாற்றினார் அஸ்ரா கார்க். பின்னர் தருமபுரி எஸ்.பியாக மாற்றப்பட்டார்.

அங்கு நத்தம் காலனி கலவரத்தின் போது தலித்துகள் மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டதில் இவர் மீது அதிருப்தி ஏற்படவே திடீரென பணி நிமித்தமான பயிற்சிக்காக வெளிநாடு அனுப்பிவைக்கப்பட்டார். பணி முடிந்து திரும்பிய ஆஸ்ரா கர்க்குக்கு, கடந்த பல வாரங்களாக எந்த பணியும் வழங்காமல் தமிழக அரசு அவரை கட்டாய காத்திருப்பில் வைத்திருந்தது.

இந்நிலையில், போலீஸ் நிர்வாகப் பிரிவு உதவி ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+