சொத்துக்குவிப்பு வழக்கு.. மத்திய அரசு அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு ஜெயில்: சிபிஐ நீதிமன்றம் அதிரடி
மத்திய அரசு அதிகாரி, மனைவிக்கு 4 ஆண்டு சிறைதண்டனை சிபிஐ வழங்கியுள்ளது.
Recommended Video

சென்னை: மத்திய அரசு அதிகாரி ஒருவர், தன் வருமானத்துக்கும் அதிகமான சொத்துக்களை குவித்தது தொடர்பான வழக்கில் அவருக்கும் அவரது மனைவிக்கும் 4 ஆண்டு கால சிறை தண்டனையை சிபிஐ வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய கலால் வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் முத்துக்குமாரசாமி. இவர், அந்த அலுவலகத்தில் தணிக்கை துறையில் கண்காணிப்பாளராக உள்ளார்..

1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தாம் பணியில் இருந்த காலத்தில் தன்னுடைய வருமானத்துக்கும் அதிகமாக அதிகமாக 40 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை சொத்துகள் வாங்கி குவித்ததாக சிபிஐ அவர் மீது வழக்கு பதிவு செய்தது. முறைகேடாக வாங்கிய இந்த சொத்துக்களை குவிக்க அவரது மனைவி கிருஷ்ணாபாயும் உடந்தையாக இருந்ததாக கூறி அவர் மீதும் சிபிஐ வழக்கு தொடுத்தது.
இதன் மீதான வழக்கினை நீதிபதி வசந்தி நடத்தி வந்தார். வழக்கு விசாரணை சென்னையின் 14-வது சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், முத்துக்குமாரசாமி, மற்றும் அவரது மனைவிக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி வசந்தி உத்தரவிட்டார்.
அத்துடன், கணவன்-மனைவி இருவரும் 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்க வேண்டும் என ஆணையிட்டார். இந்த தகவலை சிபிஐ அலுவலகம் வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications