அதிராம்பட்டினம் மாணவி கல்லூரி அறையில் தூக்கிட்டு தற்கொலை.. ஆசிரியர்கள் திட்டியது காரணமா?!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் ஆசிரியர்கள் அறைக்குள்ளே தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கெண்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்டவர் பி.ஏ முதலாம் ஆண்டு மாணவி சுலோச்சனா என தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவரது தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சமீபகாலமாக மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகின்றது. உரிமைக்காக சில மாணவர்களும், சகிப்பின்மை காரணமாக சில மாணவர்களும் என தற்கொலை பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அதில் சிலர்தான் ரோஹித் வெமுலா, எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள், அண்ணா பல்கலைக்கழக மாணவி. அந்த பட்டியலில் தற்போது சுலோச்சனாவும் இணைந்துள்ளார்.
ஆசிரியர் ஒருவர் திட்டியதால் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும், சீனியர் மாணவிகள் கிண்டல் செய்ததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில்தான் விழுப்புரம் அருகே தனியார் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவியர் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட செயல் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இந்த நிலையில் இன்னும் ஒரு தற்கொலை நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications