ரூ.1 கோடி ஏடிஎம் பணம் கொள்ளை வழக்கு - தூத்துக்குடி கோர்ட்டில் சரணடைய வந்த வாலிபர் ஓட்டம்
சென்னையில் வங்கிப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் தூத்துக்குடி கோர்ட்டில் சரண் அடைய வந்துவிட்டு தப்பி ஓடினார்.
தூத்துக்குடி: சென்னையில் ஏடிஎம்மில் நிரப்ப கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் சரணடைய வந்த வாலிபர் திடீரென தப்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் கடந்த மூன்றாம் தேதி லாஜி கேஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் ஏடிஎம் மையங்களில் நிரப்ப கொண்டு சென்ற பணத்தில் ரூ.118 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக பணத்துடன் தப்பி ஓடிய கார் டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி எதூத்துக்குடி நீதிமன்றத்தில் கடந்த 6ம் தேதி சரணடைந்தார். போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரித்தனர்.

இசக்கி பாண்டி பணத்தை கொள்ளையடித்த பின்னர் நாசரேத் அருகே வசிக்கும் தனது தங்கை வடிவு வீட்டுக்கு வந்து சென்றதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 7ம் தேதி தனிப்படை போலீசார் வைத்தியலிங்கபுரத்தில் வடிவின் கணவர் கனகராஜிடமும், அவரது சகோதரர் ஜவஹரிடமும் விசாரணை நடத்தினர்.
கொள்ளையடித்த பணத்தில் ரூ.72 லட்சத்தை இசக்கி பாண்டி தங்களிடம் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்தனர். இந்த தகவலின் பேரில் வைத்திலிங்கபுரம் தேரி காட்டில் பிளாஸ்டிக் கவரில் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.72 லட்சத்தை போலீசார் மீட்டு இருவரையும் கைது செய்தனர்.
கொள்ளையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் இசக்கிபாண்டியின் மைத்துனர் வீரபாகு தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைய வந்தார். இதில் அவர் எந்த வழக்கில் தேடப்படுபவர் என்பதை சரியாக குறிக்கவில்லை. இதையறிந்த வீரபாகு மாலையில் அங்கிருந்த நைசாக ஓட்டம் பிடித்தார். நீதிமன்றத்தில் வைத்து அவரை பிடிக்க முயற்சிக்காமல் போலீசார் கோட்டை விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications