அட்டாக் பாண்டியை மதுரை சிறைக்கு மாற்றக் கோரி மனைவி வழக்கு
மதுரை: அட்டாக் பாண்டியை மதுரை சிறைக்கு மாற்ற வேண்டும் என்று அவரது மனைவி மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மதுரையை சேர்ந்த தி.மு.க பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் நீண்ட காலமாக தேடப்பட்டு பின்னர் திடீரென கைது செய்யப்பட்டவர் அட்டாக் பாண்டி. இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தனது கணவரை என்கவுண்டரில் போட்டுத் தள்ள போலீஸார் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே பாண்டியின் மனைவி தயாளு குற்றம் சாட்டியிருந்தார். அச்சம் தெரிவித்துள்ளா். இந்த நிலையில் அவரை மதுரை சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்று கோரி மதுரை ஹைகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளார் தயாளு.
இந்த மனு நீதிபதி ஆர்.மாலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. தயாளு சார்பில் வழக்கறிஞர்கள் சுபாஷ்பாபு, இளங்கோ ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கில் வாதாட அரசு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டதை தொடர்ந்து விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications