ஷேர் ஆட்டோவில் மாணவியை கடத்த முயற்சி... 2 பேருக்கு போலீஸார் வலைவீச்சு
சென்னை: சென்னையில் ஷேர் ஆட்டோவில் வந்த மர்மநபர்கள் பள்ளிக்கு செல்லும் மாணவியை கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார் பேட்டை கார்ப்பரேஷன் காலனியை சேர்ந்தவர் மீர்பகது (35). இவரது மகள் ஷமீரா(14) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஷமீரா புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலையில் வழக்கம் போல பள்ளி செல்வதற்காக தண்டையார்பேட்டை பஸ் நிறுத்தத்தில் ஷமீரா காத்திருந்தார். பஸ் வராததால், அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறினார். சோனியாவுடன் அந்த ஆட்டோவில் ஒரு ஆண், ஒரு பெண் இருந்துள்ளனர். அந்த பெண் சிறிது தூரம் ஆட்டோ சென்றதும் இறங்கிவிட்டார். பின்னர் சோனியாவும் இரு இளைஞரும் மட்டுமே அந்த ஆட்டோவில் பயணித்துள்ளனர்.

இதனிடையே ஆட்டோ வேறு வழக்கமாக வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றுள்ளது. இதனால் அச்சமடைந்த சோனியா சத்தம்போட்டுள்ளார். இதன்காரணமாக அருகில் இருந்த இளைஞர் சோனியாவின் வாயை பொத்தவே, ஆட்டோ விரைவாக சென்றது. தண்டையார் பேட்டை காலரா மருத்துவமனை அருகே ஆட்டோ வந்த போது டிராபிக்கில் சிக்கியது. இதையடுத்து மற்ற வாகன ஓட்டிகள் மாணவியை பார்த்ததும், இளைஞர் அந்த மாணவியை விடுவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பித்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். அவர்கள் அளித்த புகாரை அடுத்து, போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications