நடிகைகள் பொம்மைகளுக்கு இங்கு இடமில்லை.. ஜல்லிக்கட்டு அலங்கரிக்கும் ஜவுளிக்கடை!
பட்டுக்கோட்டையில் உள்ள மங்களம் ஜவுளிக்கடை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாடுபிடி வீரர் ஒருவர் காளையை அடக்குவது போன்ற பொம்மையை வைத்துள்ளனர். இது வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
தஞ்சை : பட்டுக்கோட்டையில் உள்ள மங்களம் ஜவுளிக்கடை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாடுபிடி வீரர் ஒருவர் காளையை அடக்குவது போன்ற பொம்மையை வைத்துள்ளனர். பல துணிக்கடைகள் வியாபாரத்திற்காக நடிகைகளின் படங்களை வைதிருக்கும் நிலையில் மங்களம் துணிக்கடையில் ஜல்லிக்கட்டை சிறப்பிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த பொம்மை வாடிக்கையைளர்களை கவர்ந்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் எனக்கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் இயங்கி வரும் மங்களம் துணிக்கடை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சீறிவரும் காளையை மாடுபிடி வீரர் ஒருவர்அடக்குவது போன்ற பொம்மையை வைத்துள்ளனர். வியாபாரத்திற்காக துணிக்கடைகள் நடிகைகளை அலங்கரித்து கடை முழுவதும் விளம்பர பலகைகளை வைத்து வரும் நிலையில் மங்களம் துணிக்கடை ஜல்லிக்கட்டை அலங்கரித்திருப்பது கடைக்கும் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
மேலும் பாயும் காளைக்கு மேலே விவசாயத்தை போற்றும் வகையில் உழவே எங்கள் வாழ்வு என்ற வாசம் அடங்கிய விளம்பர பலகையையும் அவர்கள் கட்டித் தொங்கவிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்த புகைப்படத்தைப் பார்த்து மங்களம் துணிக்கடைக்குநெட்டிசன்கள் சபாஷ் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications