அமைச்சர் ஜெயக்குமார் தெருப்பேச்சு பேசியிருக்கிறார்.. விடாமல் விளாசும் குருமூர்த்தி!
அமைச்சர் ஜெயக்குமார் தன் பேச்சின் அர்த்தம் புரியாமல் அவதூறாக பேசியிருக்கிறார் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தன் பேச்சின் அர்த்தம் புரியாமல் தெருப்பேச்சு பேசியிருப்பதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவாளர்களை 6 மாதம் கழித்து நீக்கியிருப்பது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவத்தார். மேலும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆண்மையைற்றவர்கள் என விமர்சித்திருந்தார்.
இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குருமூர்த்தியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் எழுந்தது.

அவர்கள்தான் இப்படி பேசுவார்கள்
குருமூர்த்தியின் இந்த விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். ஆண்மையற்றவர்கள்தான் இதுபோன்று பேசுவார்கள் என்றும் அவர் கூறினார்.

காங்கேயம் காளை போன்று
அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர்; எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்தார்.

படித்த முட்டாள்
மேலும் குருமூர்த்திக்கு நாவடக்கமும் நிதானமும் தேவை என்றும் அவர் எச்சரித்தார். ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு படித்த முட்டாள் என்றும் ஜெயக்குமார் சாடினார்.

புரியாமல் பேசியிருக்கிறார்
இந்நிலையில் தான் பேசியது குறித்து குருமூர்த்தி டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில் தான் பேசியதன் அர்த்தம் புரியாமல் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை அவதூறாக பேசியிருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.
|
தெருப்பேச்சு பேசியுள்ளார்
மேலும் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை பற்றி தெருப்பேச்சு பேசியுள்ளார் என்றும் குருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சரின் தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பெச்சில் ஈடுபட்டால்தான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன் என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications