அமைச்சர் ஜெயக்குமார் தெருப்பேச்சு பேசியிருக்கிறார்.. விடாமல் விளாசும் குருமூர்த்தி!
அமைச்சர் ஜெயக்குமார் தன் பேச்சின் அர்த்தம் புரியாமல் அவதூறாக பேசியிருக்கிறார் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் தன் பேச்சின் அர்த்தம் புரியாமல் தெருப்பேச்சு பேசியிருப்பதாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
தினகரன் ஆதரவாளர்களை 6 மாதம் கழித்து நீக்கியிருப்பது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவத்தார். மேலும் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் ஆண்மையைற்றவர்கள் என விமர்சித்திருந்தார்.
இது அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குருமூர்த்தியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் எழுந்தது.

அவர்கள்தான் இப்படி பேசுவார்கள்
குருமூர்த்தியின் இந்த விமர்சனத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்தார். ஆண்மையற்றவர்கள்தான் இதுபோன்று பேசுவார்கள் என்றும் அவர் கூறினார்.

காங்கேயம் காளை போன்று
அதிமுக நிர்வாகிகள் காங்கேயம் காளை போன்று இயக்கத்தை கட்டிக்காத்து வருகின்றனர்; எந்த முகத்தில் பேசுகிறார் என்பதை ஆடிட்டர் குருமூர்த்தி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கண்டித்தார்.

படித்த முட்டாள்
மேலும் குருமூர்த்திக்கு நாவடக்கமும் நிதானமும் தேவை என்றும் அவர் எச்சரித்தார். ஆடிட்டர் குருமூர்த்தி ஒரு படித்த முட்டாள் என்றும் ஜெயக்குமார் சாடினார்.

புரியாமல் பேசியிருக்கிறார்
இந்நிலையில் தான் பேசியது குறித்து குருமூர்த்தி டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார். அதில் தான் பேசியதன் அர்த்தம் புரியாமல் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை அவதூறாக பேசியிருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார்.
|
தெருப்பேச்சு பேசியுள்ளார்
மேலும் அமைச்சர் ஜெயக்குமார் தன்னை பற்றி தெருப்பேச்சு பேசியுள்ளார் என்றும் குருமூர்த்தி குற்றம்சாட்டியுள்ளார். அமைச்சரின் தெருப் பேச்சுக்கு நான் பதில் தெருப்பெச்சில் ஈடுபட்டால்தான் அவர் கூறிய பட்டதுக்கு ஏற்றவனாவேன் என்றும் குருமூர்த்தி தனது டிவிட்டில் தெரிவித்துள்ளார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications