மணல் கடத்திய ஆத்தூர் யூனியன் சேர்மன் – வி.ஏ.ஓ புகாரின் பேரில் சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

ஆத்தூர்: திண்டுக்கல்லில் வி.ஏ.ஓ புகாரின் பேரில் ஆத்தூர் யூனியன் சேர்மன் கோபி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் யூனியன் சேர்மன் கோபி. இவர் மணல் கடத்தல் புகாரில் இன்று காலையில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

Authur Union chairman arrested under the VAO complaint

ஆறு, ஏரிகளில் ஆட்களை வைத்து மணல் கடத்தினார் கோபி என்பதை கண்டுபிடித்துவிட்ட ஆத்தூர் விஏஓ நிர்மலா, செம்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்ய தீவிரம் காட்டினர். தான் கைது செய்யப்படாமல் இருக்க அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் உதவியை நாடினார்.

சென்னை வந்து அவரை சந்தித்து ஆதரவு கேட்பதற்காக வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்துகொண்டிருந்தார். திருச்சி நிலையத்தில் ரயில் நின்றபோது, காரில் பின் தொடந்து வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி. அதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+