மைனர் மகள் காதல் திருமணம்.. மனமுடைந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை: காதலன் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 10ம் வகுப்பு படித்து வந்த தனது மகள் தனது 23வயது காதலனை மணந்த துக்கத்தில் மனமுடைந்த சென்னை ஆட்டோ டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை முகப்பேர் கிழக்கு கலெக்டர் நகர் முதல் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரவி (46). இவரது 15 வயது மகள் தற்போது 10 வகுப்பு படித்து வருகிறார். ரவியின் மகளுக்கும், அயப்பாக்கத்தைச் சேர்ந்த சுகுமார் (23) என்ற இளைஞருக்கும் நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 14ந்தேதி, வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி, சுகுமாரை திருப்பதியில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப் படுகிறது. மகளைக் காணவில்லை என போலீசில் புகார் தெரிவித்திருந்த ரவி, 3 நாட்கள் கழித்து திருமண கோலத்தில் வீடு திரும்பிய மகளைக் கண்டு அதிர்ந்து போயுள்ளார்.

சிறுமி பெற்றோரைச் சமாதானப் படுத்த முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை எனத் தெரிகிறது. படிக்கும் வயதில் காதல், திருமணம் என தன் வாழ்வைக் கெடுத்துக் கொண்டாலே என வேதனையில் ரவி உறவினர்களிடம் புலம்பியுள்ளார்.

மகளின் திடீர் திருமணத்தால் மன உளைச்சலில் சிக்கித் தவித்த ரவி, தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஜெ.ஜெ.நகர் போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, ரவியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஆள் கடத்தல், மைனர் பெண்ணை பலாத்காரம் செய்தல், கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த ஜெ.ஜெ.நகர் போலீசார் சுகுமார் மற்றும் அவரது சித்தப்பா மூர்த்தி ஆகியோரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளானர்.

கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட சிறுமி தற்போது கோர்ட் உத்தரவுப்படி, சென்னையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+