குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி... மகன், மகளை எரித்துக் கொன்று ஆட்டோ டிரைவர் தற்கொலை
சென்னை: குடும்பம் நடத்த மனைவி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆட்டோ டிரைவர், சொந்த மகன், மகளை எரித்துக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் கொல்லைமேட்டு தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சம்பத் (40). இவரது மனைவி செல்வி (35). இவர்களுக்கு கார்த்திக் (11), நந்திதா (10) என இரண்டு குழந்தைகள்.
வீட்டின் கீழ்தளத்தில் சம்பத்தும், மேல்தளத்தில் உள்ள கூரை வீட்டில் சம்பத்தின் தந்தை கன்னியப்பனும் வசித்து வந்தனர். செல்விக்கு சிங்கப்பெருமாள் கோவிலில் வசிக்க பிடிக்கவில்லை. எனவே, செங்குன்றத்தில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்று வாழ சம்பத்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.

ஆனால் தனது தந்தை, தாயுடன் இருக்கவே சம்பத் விரும்பியதாக தெரிகிறது. இருப்பினும் மனைவியின் வற்புறுத்தலால் கடந்த வாரம் செங்குன்றத்தில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். ஆனால், அங்கு வாழ சம்பத்திற்குப் பிடிக்கவில்லை.
இதனால் மீண்டும் சிங்கபெருமாள் கோவிலுக்கே சென்று வாழலாம் என மனைவியை சம்பத் அழைத்துள்ளார். ஆனால், அதற்கு செல்வி மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சம்பத், நேற்று முன்தினம் இரவு செங்குன்றத்தில் டியூசனுக்கு சென்ற மகனையும், மகளையும் அழைத்துக்கொண்டு சிங்கப்பெருமாள் கோவிலுக்கு சென்று விட்டார்.
அங்கு தனது குழந்தைகளுக்கு பிரியாணி வாங்கிக்கொடுத்த சம்பத், பின்னர் குழந்தைகளை தூங்க வைத்துள்ளார். மனைவி தன்னுடன் வாழ வர மறுத்ததால், சோகத்தில் இருந்த சம்பத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த குழந்தைகள் மீதும், தனது உடல் மீதும் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்தார்.
3 பேரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், வீடு முழுவதும் ஒரே புகைமூட்டமாக இருந்ததால், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே 3 பேரும் தீயில் கருகிய நிலையில் கிடந்தனர். இதில் சிறுவன் கார்த்திக் மட்டும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பத் மற்றும் நந்திகாவை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த மறைமலைநகர் போலீசார், சம்பத்தின் மனைவி செல்வியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பத்தகராறு காரணமாக தந்தையே தனது இரு குழந்தைகளைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி












Click it and Unblock the Notifications