சென்னையில் ஆட்டோ கட்டணத்தை குறைத்தால் போராட்டம்.. தொழிற்சங்கங்கள் திட்டம்
சென்னை: சென்னையில், ஆட்டோ கட்டணத்தை குறைத்தால், போராட்டம் நடத்தப்படும் என்று ஆட்டோ தொழிற்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னையில், முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.25ம் அதன்பிறகு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.12 வீதம் வசூலிக்க வேண்டும் என அரசு நிர்ணயித்துள்ளது.

இந் நிலையில் எரிபொருள் கட்டணக்குறைவையடுத்து ஆட்டோ கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு விசாரணை சமீபத்தில், சென்னை ஹைகோர்ட்டில் வந்தது.
அப்போது, தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில், குறைந்தபட்ச கட்டணத்தில் ரூ.1 குறைக்க உத்தரவிடப்படும் என்று, தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி 1ம் தேதி முதல், இந்த புதிய கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆட்டோ கட்டணத்தை குறைத்தால் அதை எதிர்த்து போராடுவோம் என்று ஆட்டோ தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சேஷ சாயினம் இதுபற்றி கூறியதாவது:
1995 முதல் 2006 வரை 11 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் விலை 13 முறை உயர்ந்தபோது ஆட்டோ கட்டணத்தை அரசு உயர்த்தவில்லை. பலமுறை போராட்டம் நடத்திய பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை.
2006ல் கட்டண உயர்வு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2013ல் புதிய ஆட்டோ கட்டணத்தை இந்த அரசு நிர்ணயம் செய்தது.
பெட்ரோல் விலை உயர்வுக்கு ஏற்ப ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும். இதற்காக முத்தரப்பு கமிட்டி ஒன்றை அமைக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதையும் செய்யவில்லை. ஜி.பி.ஆர்.எஸ். கருவி தருவதாக கூறினார்கள் அதையும் வழங்கவில்லை.
பெட்ரோல், டீசல் விலை குறைந்தால் மட்டும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கூறினார்கள். உயர்ந்த போது ஏன் கட்டணத்தை கூட்டவில்லை. கட்டணத்தை குறைக்க கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எரிபொருள் தவிர மற்ற பொருட்கள் விலை உயர்வாக உள்ளது. ஆட்டோ கட்டணத்தை குறைக்க கூறுவது போல பஸ், ரயில் கட்டணத்தை குறைக்க கூறுவார்களா?
மீட்டர் கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் தப்பில்லை. ஆனால் கட்டணத்தை குறைக்க கூறினால் ஆட்டோ தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்.
தி.மு.க., அ.தி.மு.க., சி.ஐ.டி.யு, விடுதலை சிறுத்தை, ஐ.என். டி.யு.சி., பாட்டாளி உள்பட அனைத்து தொழிற் சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் குதிப்போம். அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகளும் ஆதரவு தருவதாக கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் 72 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோக்களுக்கு கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25ம் தேதி அரசு கட்டணம் நிர்ணயம் செய்து நடைமுறைப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை












Click it and Unblock the Notifications