முழு அடைப்புக்கு ஆதரவு: தமிழகத்தில் நாளை ஆட்டோக்கள் ஓடாது- 11 சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு #tnbandh
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் நாளைய முழு அடைப்புக்கு ஆதரவாக ஆட்டோக்கள் ஒட்டுமொத்தமாக இயங்காது என 11 சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து தமிழகத்தில் நாளை முழு அடைப்பு நடத்தப்படுகிறது. விவசாய மற்றும் வணிகர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ள இந்த முழு அடைப்புக்கு அனைத்துத் தரப்பும் முழு ஆதரவைத் தந்துள்ளன.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் நாளை மூடப்படுகின்றன. ஆம்னி பஸ்கள், லாரிகள் இயக்கப்படவில்லை..
இதேபோல் ஆட்டோக்களும் நாளைய முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆட்டோ சங்க பொதுச்செயலர் சேஷசயனம், அதிமுக தொழிற்சங்கம் தவிர்த்து 11 ஆட்டோ சங்கங்கள் நாளைய முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மொத்தம் 2.5 லட்சம் ஆட்டோக்கள் நாளை ஓடாது என்றார்.












Click it and Unblock the Notifications