கடவுள் வழிபாட்டுடன் கூடிய விழிப்புணர்வு பயிற்சி
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் காட் இந்தியா டிரஸ்ட் (GOD INDIA TRUST) மூலம் 16.11.2015 அன்று கடவுள் வழிபாட்டுடன் கூடிய ஆயத்தப்படுதுதல் விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சி தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியை விஜயலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். காட் இந்தியா டிரஸ்ட் பயிற்சியாளர் முரளி விழிப்புணர்வு பயிற்சியை நடத்தினார்.

பயிற்சியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, விடாமுயற்சி பற்றி விளக்கப்பட்டது. எதிர்கால குறிக்கோளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியும், அக்குறிக்கோளை அடைய பொருளாதாரம் ஒரு தடையல்ல. தன்னம்பிக்கை இருந்தால் எதையும் எளிதில் சாதிக்கலாம் என்று மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

பயிற்சியின் முடிவில் மாணவர்கள் பயிற்சியின் அனுபவம் பற்றி கூறினர். பட்டதாரி ஆசிரியர் கோமதி ஜெயம் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர்கள் கீதா சுந்தரேஸ்வரி மற்றும் ஜாக்குலின் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications