For Daily Alerts
Just In
திருச்சியில் திமுக கோலாகலம்.. மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி தந்து சந்தோஷித்த அழகிரி
திருச்சியில் திமுகவின் 10வது மாநில மாநாடு 2 நாட்களுக்கு நடந்தது. இதில் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. காரணம் இவர் தற்போது திமுகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால்.
இதன் காரணமாக அழகிரி தரப்பிலிருந்து யாரும் மாநாட்டில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் மதுரையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியிருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தன் சார்பில் பிரியாணி விருந்தளித்துள்ளார் அழகிரி.
அழகிரி சார்பில் அவரது மகன் துரை தயாநிதியே நேரடியாக சென்று குழந்தைளுக்கு பிரியாணி விருந்தைப் பரிமாறி அவர்கள் சாப்பிடட அழகைப் பார்த்து சந்தோஷித்தாராம். அதைக் கேள்விப்பட்டு அழகிரியும் மகிழ்ந்தாராம்.
Comments
English summary
Sacked DMK leader M K Azhagiri offered briynai feast to orphan kids in Madurai.
Story first published: Monday, February 17, 2014, 17:24 [IST]