மோசடி வழக்கில் பார்வர்ட் பிளாக் தலைவர் அரசக்குமார் கைது
Subscribe to Oneindia Tamil

திருச்சி மாவட்டம், புல்லம்பாடியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர், ஆசிரியர் பயிற்சி பள்ளி தொடங்க மத்திய, மாநில அரசிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று வருவதாக பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் அரசகுமாரிடம் 14 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், அவர் தடையில்லா சான்றிதழ் வாங்கி கொடுக்கவில்லை.
இதையடுத்து, முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அரசைகுமாரை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
பின்னர், அரசக்குமாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால், உரிய சிகிச்சையளிக்க உத்தரவிட்டா நீதிபதி.












Click it and Unblock the Notifications