பாபர் மசூதி இடிப்பு நினைவு தினம் : உச்சக்கட்ட பாதுகாப்பு சென்னையில் ஆர்பாட்டம், கோவையில் மறியல்
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினம் இன்று அனுசரிக்கப்படுவதால் தமிழகம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: அயோத்தியில் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டு 26வது ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை கோவையில் ஆர்பாட்டம்,மறியல் போராட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் ஒவ்வொரு டிசம்பர் 6ம்தேதியும் பாபர் மசூதி இடத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க கோரியும், இடித்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்க கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்த போராட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். கோவையில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.
பாபர் மசூதி இடிப்பின் 26 ஆவது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னையில் அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பதற்காக சென்னையிலுள்ள சென்ட்ரல் ரயில் நிலையம், விமான நிலையம், துறைமுகம், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மத்திய, மாநில பாதுகாப்பு ஏஜென்சியினர், புலனாய்வுத் துறையினர் ஆகியோர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சபரிமலைக்கு தீவிரவாதிகள் மிரட்டல் உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
மத்திய கமாண்டோ போலீசார் 100 சபரிமலையில் முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளனர். சபரிமலை 3 அடுக்கு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. மேலும் முதல் முறையாக இந்த ஆண்டு சபரிமலையில் ஹெலிகாப்டர் மூலமும் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சபரிமலை வரும் பக்தர்களும் தீவிர சோதனைக்கு பிறகே 18ஆம் படி ஏற அனுமதிக்கப்படுகிறார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications