For Daily Alerts
Just In
சிறுமுகை வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டி யானை மர்மமான முறையில் உயிரிழப்பு
கோவை மாவட்டம் சிறுமுகை அருகே வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
கோவை: சிறுமுகை அருகே வனப்பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியானை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் குட்டியானையின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்த குட்டியானை பிறந்து ஒரு மாதமே ஆனது எனக் கூறப்படுகிறது.
என்ன காரணத்தினால் அந்த குட்டியானை உயிரிழந்தது என்பது குறித்து தெரியவில்லை. குட்டியானையின் மரணத்திற்கு உடல்நலக் குறைவு காரணமா அல்லது வேறு ஏதாவதா என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிறந்து ஒரு மாதமே ஆன குட்டியானை மர்மமான முறையில் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
English summary
In Sirumugai forest near Kovai a baby elephant was found dead mysteriously.
Story first published: Friday, November 4, 2016, 12:23 [IST]