For Daily Alerts
Just In
அத்துமீறி சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் நுழைந்த வங்காளதேச வாலிபர் கைது
சென்னை: அத்துமீறி சென்னை ராணுவ பயிற்சி மையத்தில் நுழைந்த வங்காளதேச வாலிபரை விமான நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
வங்காளதேசத்தைச் சேர்ந்தவர் முகமது அட்டப்அலி (35). இவர் இன்று சென்னை விமான நிலையம் அருகே உள்ள ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி பெறும் இடத்தில் நுழைந்து உள்ளார்.
அத்துமீறி நுழைந்த அவரை ராணுவத்தினர் பிடித்து விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அதனைத் தொடர்ந்து அட்டப்அலியைக் கைது செய்த போலீசார் அவரை விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், ‘சென்னை விமான நிலையம் இருக்கும் இடம் தெரியாமல் அங்கு நுழைந்து விட்டதாகவும், தனது உடமைகள் திருடு போய் பாஸ்போர்ட் மட்டுமே இருப்பதாகவும் அட்டப்அலி கூறியதாகத் தெரிகிறது.
இருப்பினும் இவர் சொல்வது உண்மையா என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
Today in Chennai the police have arrested a person from Bangladesh for allegedly entered into the military area in Alandur.
Story first published: Tuesday, November 11, 2014, 15:46 [IST]