பெரம்பலூரில் கல்வி கடனை வசூலிக்க வங்கி எடுத்த அஸ்திரம்.. குடும்பத்தையே ஆடிப்போக வைத்த தாயின் முடிவு
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சின்னதுரை செல்லம்மாள் என்ற தம்பதி தனியார் வங்கி கிளையில் கடந்த 2018-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் தங்கள் மகனுக்காக கல்வி கடன் வாங்கியுள்ளார்கள். ஆனால் கடனில் வட்டியுடன் பாதியை கட்டிய நிலையில், மீதியை கட்டவில்லையாம். இதனிடையே அவர் வங்கியில் சேர்த்து வைத்த ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் சேமிப்பு பணத்தை எடுக்க போன போது வங்கி மேலாளர் அனுமதிக்கவில்லையாம். இதனால் செல்லம்மாள் எடுத்த முடிவு அதிர வைத்துள்ளது.
மாணவர்கள் கல்வி கற்க பணம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக கல்விக்கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கல்விக்கடன் வாங்கியவர்கள் படித்து முடித்த பின்னர் திரும்ப செலுத்த ஆரம்பிக்க வேண்டும். கல்விக்கடனை பொறுத்தவரை வட்டி மிகவும் குறைவு ஆகும். எனினும் கல்வி கடனை அடைக்க முடியாத நிலையில் பலர் தவித்து வருகிறார்கள். பாதி கடனை கட்டியும், பாதி கடனை கட்டாமலும் பலர் இருக்கிறார்கள். அதேபோல் கல்வி கடனை அரசு தள்ளுபடி செய்துவிடும் என்ற எதிர்பார்ப்பிலும் சிலர் கடனை அடைக்காமல் இருக்கிறார்கள்.

இதன் காரணமாக கல்வி கடனை வசூலிப்பதில் சிக்கல் நிலவுகிறது. சிலர் கல்விக்கடனை சரியாக செலுத்தி வந்தாலும், குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் கடனை கட்டாமல் விடுகிறார்கள். அப்படி கடனை கட்டாதவர்களிடம் கடனை வசூலிக்க பல்வேறு நடவடிக்கைகளை வங்கிகள் எடுக்கின்றன. அப்படி எடுத்த நடவடிக்கையால் விரக்தி அடைந்த பெரம்பலூர் அருகே பெண் ஒருவர் உயிரையே விட்டுவிட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள சிறுகுடல் கிராமத்தை சேர்ந்த 50 வயதாகும் சின்னதுரை என்பவரது மனைவி செல்லம்மாள் (43). இவர்களது மூத்த மகன் சுதாகர் என்ஜினியரிங் படித்து முடித்து திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இவருடைய படிப்புக்காக கீழப்புலியூர் கிராமத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் சின்னதுரை-செல்லம்மாள் தம்பதி, கடந்த 2018-ம் ஆண்டு ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் கல்வி கடன் வாங்கினார்களாம் தற்போது வட்டியுடன் ரூ.4 லட்சத்து 48 ஆயிரத்தில், ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கட்டிய நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக மீதி தொகை செலுத்தாமல் நிலுவையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையே சின்னதுரை-செல்லம்மாள் தம்பதி கூலி வேலை செய்து சிறுக, சிறுக வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 41 ஆயிரம் சேமித்து வைத்திருந்தார்களாம். இந்த பணத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை அவசர தேவைக்காக வங்கியில் நேற்று செல்லம்மாள் எடுக்க சென்றுள்ளார். பணம் எடுக்க எழுதி கொடுத்து காத்திருந்த நிலையில், அந்த வங்கி மேலாளர், மகனின் கல்விக் கடனை செலுத்தினால் மட்டுமே பணத்தை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.
இதனால் வேதனையடைந்த செல்லம்மாள் மாலை 4 மணி வரை காத்திருந்துள்ளார். மேலும் கெஞ்சி கேட்டும் வங்கியில் பணம் வழங்கவில்லையாம். இதனால் விரக்தி அடைந்த செல்லம்மாள் அங்கிருந்து ஊருக்கு திரும்பி, தனது வயலுக்கு சென்று சேலையால் தூக்கிட்டு உயிரையே விட்டுவிட்டாராம் . இதுகுறித்து தகவலறிந்த சென்ற மருவத்தூர் போலீசார் , உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications