அடகு வைத்த மனைவி தாலியை தர மறுத்த ஐஓபி.. அவமானத்தால் விவசாய சங்க தலைவர் தற்கொலை
வங்கிக் கடனை காரணம் காட்டி அடகு வைத்த தாலியை மீட்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அனுமதி மறுத்துள்ளது. மேலும் விவசாய சங்கத் தலைவரை வங்கியில் இருந்து இழுத்து வெளியே தள்ளியுள்ளனர் அதிகாரிகள்.
திருநெல்வேலி: விவசாயக் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் மீட்கப்பட்ட தாலியை தர முடியாது என்று வங்கி அதிகாரிகள் ஆணவத்தோடு நடந்து கொண்டனர். இதனால் அவமானப்படுத்தப்பட்ட சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார்.
சித்தாறு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் வேம்புகிருஷ்ணன். இவர் நெல்லை மாவட்டம் மானூர் கிராமத்தைச் சேர்ந்தவர். தனது விவசாய செலவிற்காக இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடம் கடன் பெற்றுள்ளார். வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் பயிர்கள் கருகி நாசமாகின. இதனால் அவரால் கடனை திரும்ப கட்ட முடியவில்லை.

இந்நிலையில் வங்கியில் அடகு வைத்துள்ள மனைவியின் தாலியையாவது மீட்டுவிட வேண்டும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சென்றார் வேம்புகிருஷ்ணன். அங்கு அவருக்கு வழங்கப்பட்ட பயிர் கடனை காரணம் காட்டி தாலியை திரும்பத் தர வங்கி அதிகாரிகள் மறுத்துள்ளனர். மேலும் அவமரியாதையோடு விவசாய சங்கத் தலைவரான வேம்புகிருஷ்ணனை பேசியுள்ளார். அதோடு நிற்காமல் வங்கியில் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்து வந்து வெளியே வங்கி அதிகாரிகள் தள்ளியுள்ளனர்.
இதனால் மனம் உடைந்த வேம்புகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.
விவசாயிகளை வெளியே இழுத்து தள்ளி அவமானப்படுத்துவதும், டிராக்டர்களை பறிமுதல் செய்து அலைகழிப்பதையும் செய்து வரும் வங்கிகளின், வங்கி அதிகாரிகளின் திமிர்தனம் என்று முடிவிற்கு வரும் என்று தெரியவில்லை. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications