அக்.8 முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து வங்கிகளுக்கு 5 நாட்கள் விடுமுறை
சென்னை: வங்கிகளுக்கு அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை தொடர்ந்து ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாக உள்ளன. இந்நிலையில் அக்டோபர் மாதம் வரும் ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம் ஆகிய பண்டிகைகளால் தொடர்ச்சியாக ஐந்து நாள் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.

தமிழகத்தில் 500 தனியார் வங்கிகள் உள்பட 8,500 வங்கி கிளைகள் செயல்பட்டு வருகின்றன. அக்டோபர் மாதம் 10-ம் தேதி திங்கள்கிழமை ஆயுத பூஜையும், 11-ம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயதசமியும், 12-ம் தேதி புதன்கிழமை மொகரம் பண்டிகையும் வருகிறது. இந்த 3 நாட்களும் அரசு விடுமுறை நாளாகும். 8-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் வழக்கமான விடுமுறையாகும்.
இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் வங்கி பணப்பரிவர்த்தனைகள் பாதிக்கப்படுவதுடன், ஏ.டி.எம். மையங்களில் பணத் தட்டுப்பாடு ஏற்படலாம். இந்த ஐந்து நாட்களும் வங்கிகளில் எந்தவித பணபரிவர்த்தனையும் நடக்காது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications