தபால் பைகளை எடுத்துச் செல்லும் "டர டர" டிராலிக்கு குட்பை.. மூடைகளை சுமக்கும் பேட்டரி வாகனங்கள்!
சென்னை: தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் தபால்துறையின் தபால் பைகளை சுமந்து செல்லும் டிராலிகளுக்கு விடை கொடுக்கப்பட்டுள்ளது. மாறாக, புதிய பேட்டரி வாகனங்கள் அந்தப் பணியைச் செய்யத் தொடங்கியுள்ளன.
சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் புதிய பேட்டரி வாகனங்களை தெற்கு ரயில்வேயின் பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக வட்ட தபால் துறை தலைவர் டி.மூர்த்தி, முதுநிலை கோட்ட மேலாளர் (வணிகம்) ஜி.காயத்திரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்டிரல் ரயில் நிலையத்தைத் தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் தமிழகம் முழுவதும் இந்த பேட்டரி வாகனங்களை அறிமுகப்படுத்தவுள்ளது தபால் துறை.

தபால் வார விழா
தமிழக தபால்துறையின் சார்பில் கொண்டாடப்பட்ட தபால் வார விழாவையொட்டி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

2.5 லட்சம் பேர் வந்து போகும் சென்டிரல்
நிகழ்ச்சியில், பேட்டரி வாகனத்தின் முதல் இயக்கத்தைக் கொடியசைத்து, தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தொடங்கி வைத்து பேசுகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நாள்தோறும் சுமார் 2.5 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.

தபால் பைகளால் டிராபிக் ஜாம்!
பயணிகள் நெரிசல் மிகுந்து காணப்படும் நேரங்களில், தபால் ஊழியர்கள் தள்ளுவண்டியில் தபால்களை எடுத்துச் செல்வதால், பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படுத்துகிறது.

பிளாட்பாரம் தேய்கிறது
தள்ளுவண்டியிலுள்ள இரும்புச் சக்கரங்களால், நடைமேடைகள் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதோடு, அதிக சப்தம் ஏற்படுகிறது. ஆகையால், இரும்புச் சக்கரங்களுக்குப் பதிலாக ரப்பர் சக்கரங்கள் பொருத்தப்பட்டு, பேட்டரியில் இயங்கும் வண்டி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஒரு நாளைக்கு 24 லட்சம் தபால்கள்
தமிழக வட்ட தலைமை தபால் துறைத் தலைவர் டி.மூர்த்தி பேசியபோது, தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் சுமார் 24 லட்சம் தபால்கள், 28 ஆயிரம் பார்சல்கள் பட்டுவாடா செய்யப்படுகின்றன.

ரயில் மூலம்
இவற்றில் பெரும்பாலானவை ரயில் மூலமே அனுப்பப்படுகின்றன. தபால் வாரத்தின் ஒரு பகுதியாக, தமிழக தபால் வட்டம் சோதனை அடிப்படையில் பேட்டரியில் இயங்கும் வண்டியை அறிமுகம் செய்துள்ளது என்றார்.
தபால் பைகள் அடங்கிய டிராலிகளைத் தள்ளுவதால் ஊழியர்களுக்கு ஏற்படும் கை வலி தற்போது மிச்சமாகியுள்ளது. எளிதான, யாருக்கும் தொல்லை தராத வகையில் பேட்டரி வாகனங்களை இயக்க முடிவதாக ஊழியர்களும் நிம்மதி தெரிவிக்கின்றனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications