38 எம்.பிக்கள் கையில் இருப்பதால்தான் சாதிக்க முடிகிறது.. எடப்பாடி பேச்சு
38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இருப்பதால் மட்டுமே மத்திய அரசில் இருந்து திட்டங்கள் நிதிகளை பெற்று வர முடிகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

எம்ஜிஆர் நூற்றாண்டு நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு- வீடியோ
நாகர்கோவில்: 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இருப்பதால் மட்டுமே மத்திய அரசில் இருந்து திட்டங்கள் நிதிகளை பெற்று வர முடிகிறது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு நிகழ்வில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய அவர், முதல்வராக ஜெயலலிதா இருந்த போது நீங்கள் வாக்களித்து அதிக அளவிலான நாடாளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுத்தீர்கள்.
அதேபோல் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும். 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது இருப்பதால் மட்டுமே மத்திய அரசில் இருந்து திட்டங்கள் நிதிகளை பெற்று வரமுடிகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications