காந்தி ஜெயந்தி- தென்காசியில் மாட்டு இறைச்சி பறிமுதல்
தென்காசி: காந்தி ஜெயந்தியான இன்று தென்காசியில் விற்பனை செய்யப்பட்ட மாட்டு இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.
இன்று நாடெங்கிலும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காந்தி சிலைக்கு பொதுமக்கள், மாணவ, மாணவிகள், தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு பிரியாணி கடையில் மட்டன் பிரியாணி ஒரு பார்சல் வாங்கினால் ஒரு பார்சல் இலவசம் என்று போஸ்டர் அடித்து விளம்பரப்படுத்தியுள்ளனர். இது நேற்று முதல் பொதுமக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தென்காசியில் உள்ள சில மாட்டு இறைச்சி கடைகளில் இன்று வியாபாரம் காலையில் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தனர். புகாரைத் தொடர்ந்து நகராட்சி சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் இறைச்சிக் கடைகளுக்கு சென்று அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த மாட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர்.
கடையை அடைக்குமாறு கூறிவிட்டு அதிகாரிகள் சென்றனர். ஆனால் அதிகாரிகள் கூறியும் சிலர் கடையை அடைக்காமல் திறந்து வைத்துள்ளனர். இதனை கண்டு கடையை அடைத்த இறைச்சிக் கடைக்காரர்கள் திரண்டு வந்து நகராட்சியை முற்றுகையிட்டு அந்த கடைகளையும் அடைக்க வலியுறுத்தினர். இதனால் அங்கு பரப்பரப்பு ஏற்ப்பட்டது.












Click it and Unblock the Notifications