திருப்பூரில் பரபரப்பு... ஓடும் ரயிலில் 2 பிச்சைக்காரர்கள் மோதல்... கத்திக்குத்து... ஒருவர் கைது!
திருப்பூர்: ஓடும் ரயிலில் இரண்டு பிச்சைக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், ஒருவர் மற்றொருவரை மார்பில் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையிலிருந்து சென்னை வரை செல்லும் கோவை விரைவு ரயில், நேற்று மாலை ஒரு மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தது. திருப்பூர் அருகே வந்தபோது, ரயிலில் இரண்டு பிச்சைக்காரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து ரயில் திருப்பூரில் நின்றதும், போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால், அதற்கு முன்னதாகவே ரயிலில் இருந்து இறங்கிய பிச்சைக்காரர்கள் இருவரும், நடைபாதையில் நின்றபடி ஒருவரை ஒருவர் தாக்கி சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஒரு பிச்சைக்காரர் மற்றொரு பிச்சைகாரரின் மார்பில் சிறிய வகை கத்தியால் குத்தியுள்ளார். ஆனால், மார்பில் ரத்தம் வடிந்துகொண்டிருந்த நிலையில், அவர் தொடர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.
விரைந்து செயல்பட்ட போலீசார், காயமடைந்த பிச்சைக்காரரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றொரு பிச்சைக்காரரைக் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவரின் பெயர் முருகேசன் (30) என்றும், கத்தியால் குத்தியவர் பெயர் ராஜேஷ் (35) என்றும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட முருகேசன் நேற்றிரவே அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஜேஷிடம் ரயில்வே போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓடும் ரயிலில் பிச்சைக்காரர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட திடீர் சண்டை மற்றும் கத்திக்குத்து சம்பவங்களால் அங்கிருந்த மற்ற பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங்












Click it and Unblock the Notifications