துயரங்களை ”போக்கி”... செல்கிறது “போகி”- நாளை தை பிறக்கும்... வழியும் பிறக்கும்!
சென்னை: தமிழகத்தில் போகிப் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப் பட்டு வருகின்றது. இன்று அதிகாலையிலேயே மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய பொருட்களை தீயிலிட்டு கொளுத்தி மார்கழிக்கு விடை கொடுத்தனர்.
பொங்கல் திருநாளுக்கு முந்தை நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாள் அன்று போகி கொண்டாடப்படுகிறது.
பழைய துயரங்களை அழிப்பதற்கான இந்தப் பண்டிகையைப் "போக்கி" என்று பழங்காலத் தமிழர்கள் அழைத்தனர். அந்தச் சொல் பிறகு போகி என்று மருவியது.
பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. ஒருங்கிணைந்த தூய்மைப் பணியினை ஒட்டுமொத்த மக்களும் ஈடுபடும் ஒரே நேரமிது.

தூய்மையே முக்கியம்:
குப்பைகளை தீயில் எரிப்பது, போகியன்று மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம். கடந்த ஆண்டுகளில் சுற்றுப்புறத் தூய்மை பற்றிய அக்கறைகளால் அந்த வழக்கம் பலரால் நிராகரிக்கப்பட்டு வருகிறது.

சுற்றுப்புற விழிப்புணர்வு:
தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்புறத் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக போகிப் பண்டினை தினம் மாறி வருகிறது. தூய்மையை எடுத்துரைக்கும் போகி, சுற்றுப்புற பாதுகாப்பு பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாளாக உருவெடுத்து வருவது பெருமைக்குரியது.

சுவாச பிரச்சினைகள்:
தற்போது போகி தினத்தன்று மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருள்களை எரிக்கும்போது நச்சுப் புகை வெளியேறும். இதனால் பொதுமக்களுக்கு சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

டயர், பிளாஸ்டிக் வேண்டாமே:
மேலும், நச்சுக் காற்றாலும், கரிப்புகையாலும் காற்று மாசுபட்டு நகரமே கருப்பு நகரமாக மாறுகிறது. நச்சுப் புகை கலந்த பனி மூட்டத்தால் விமானங்கள் புறப்படுவதற்கும், சாலை போக்குவரத்துக்கும் தடை ஏற்படுகிறது. காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். எனவே போகிப் பண்டிகையின் போது டயர், ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் செயற்கைப் பொருள்களை எரிக்க வேண்டாம்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications