பிக் பாஸ் வீட்டிற்கு பல்லக்கில் வந்த பிந்து மாதவி.. கட்டிப் பிடித்து வாழ்த்து சொன்ன ஓவியா
விஜய் டிவி நிகழ்ச்சியான பிக் பாஸில் புதியதாக யார் வரப் போவது என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் பிந்து மாதவி பல்லக்கில் வந்து இறங்கியுள்ளார்.
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு இன்று புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி வந்து சேர்ந்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்கு இன்று புதிய போட்டியாளர் வருவார் என ப்ரொமோ வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. புதிய வரவு யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவரிடமும் மேலோங்கி இருந்தது.
ஆனால், புதிய போட்டியாளர் பிந்து மாதவியாக இருக்கும் என்று நெட்சன்கள் கணித்திருந்த நிலையில், இன்று பிந்து மாதவி ஆராவாரமாக பல்லக்கில் வந்து பிக் பாஸ் வீட்டில் இறங்கினார்.
பிக் பாஸ் வீட்டிற்குப் போவதற்கு முன், நடிகர் கமல், பிந்து மாதவியிடம், வெளியே நடந்த விஷயங்கள் குறித்து எதுவும் உள்ளே பேசக் கூடாது என்று கண்டிஷன் போட்டார். யாரிடம் எதுவும் சொல்லமாட்டேன் என்று உறுதி கூறி உள்ளே சென்றிருக்கிறார் பிந்து மாதவி.
பல்லக்கில் இருந்து இறங்கிய உடன் அனைவரும் அவரை வரவேற்றனர். காயத்திரி, ஜூலி, ஓவியா உள்ளிட்டவர்களைக் கட்டி அணைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.
பிந்து மாதவி இதே மகிழ்ச்சியோடு பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பாரா? அல்லது அங்கு எழும் பிரச்சனையில் பிய்த்து பிடுங்கிக் கொண்டு வெளியே ஓடி வந்துவிடுவாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.