கோவையில் ரூ.55 கோடியில் பயோ பார்க்: தொழில் அமைப்புகள் வரவேற்பு!
கோவை: கோவையில் பயோ பார்க் துவங்க மாநில அரசு முடிவெடுத்துள்ளதற்கு, இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் கோவை பிரிவு வரவேற்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அதன் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ராமநாதபுரம் மாவட்டத்தில், தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி மண்டலம் துவங்கப்பட உள்ளதாக சட்டசபையில் தல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு வரவேற்பை தெரிவித்துக்கொள்கிறோம். இதுபோன்ற ஒரு மண்டலத்தை கோவையிலும் துவங்க மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட சிறு தொழில் சங்க (கொடிசியா ) தலைவர் பொன்னுசாமி கூறுகையில் "தொழிற்சாலை சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்படும் புதிய தொழில் நிறுவனங்கள் மற்றும், லைசென்ஸ் விவகாரங்களை வெப்சைட் மூலமாக மேற்கொள்ள முடிவெடுத்திருப்பது தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு பணியை எளிதாக்கும்" என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும் இரு சங்கங்களுமே, கோவையில் ரூ.55 கோடி செலவில் பயோ பார்க் அமைக்கப்பட உள்ளதாக சட்டசபையில் ஜெயலலிதா அறிவித்ததற்கும் வரவேற்பு தெரிவித்துள்ளன.
முன்னதாக இரு தினங்களுக்கு முன்பு சட்டசபையில் பேசிய ஜெயலலிதா "ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை மற்றும் ராமநாதபுரம் தாலுகாக்களை உள்ளடங்கிய பகுதியில், ரூ.6,525 கோடி செலவில் தேசிய முதலீடு மற்றும் உற்பத்தி பிரிவு ஆரம்பிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை இந்தாண்டுக்குள் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு விரைவிலேயே துவக்கப் பணிகள் ஆரம்பிக்கப்படும். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (TIDCO) இதற்கான பணிகளை மேற்கொள்ளும்" என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications