For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல்: வாபஸ் பெற்ற பாஜக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!

Google Oneindia Tamil News

சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் ஆவடி நகராட்சியின் 33வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டு பின்னர் வாபஸ் பெற்ற தாரணி அதிமுகவில் இணைந்து விட்டார்.

ஆவடி நகராட்சியின் 35வது வார்டுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுக சார்பில் உமா வேட்பாளராக இறக்கப்பட்டார். பாஜக சார்பில் தாரணி நிறுத்தப்பட்டார்.

இந்த நிலையில் இன்று திடீரென தாரணி தனது மனுவை வாபஸ் பெற்றார். இதனால் உமா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

இதையடுத்து இன்று மாலை தாரணி அதிமுகவில் இணைந்து கொண்டார். இதனால் ஆவடி பகுதி பாஜகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

English summary
BJP candidate in Aavadi ward bye election has withdrawn from the contest and joined ADMK this evening.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X