டாஸ்மாக்குக்கு எதிராக ஜூன் 15ல் கோட்டையை நோக்கி பாஜக பேரணி.... தமிழிசை : வீடியோ
தமிழகத்தில் டாஸ்மாக்குக்கு எதிராக ஜூன் 15ஆம் தேதி பிரம்மாண்ட பேரணி கோட்டையை நோக்கி நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை அறிவித்துள்ளார்.
திருச்சி: திருச்சியில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, ஜூன் 15ஆம் தேதி டாஸ்மாக்கை எதிர்த்து கோட்டையை நோக்கி மிகப் பெரிய பேரணி நடத்தப்படும் என கூறியுள்ளார்.
திருச்சியில், பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை கலந்துகொண்டார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, தமிழ்நாட்டில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு எதிராக பெண்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
பாஜக, டாஸ்மாக்குக்கு எதிராக பல ஆயிரம் பெண்களை ஒருங்கிணைத்து, அனைத்துக் கட்சியிலுள்ளவர்களையும் ஒருங்கிணைத்து டாஸ்மாக்குக்கு எதிராகக் கோட்டையை நோக்கி பிரம்மாண்ட பேரணி வரும் ஜூன் 15ஆம் தேதி, நடத்தப்படும் என கூறினார்.
டாஸ்மாக்குக்கு எதிராக கட்சி சாராமல் அந்தந்த ஊர்களில் பெண்களே தன்னிச்சையாகப் போராடி வரும் வேளையில், பாஜக அந்த உணர்வை பயன்படுத்தி தமிழகத்தில் ஏதாவது செய்து காலூன்றப் பார்க்கிறது என சமூகநல ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.