பாஜக செல்வாக்கு சரிவதையே இடைத் தேர்தல் காங். வெற்றிகாட்டுகிறது- ஞானதேசிகன்
சென்னை: வடமாநில இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற வெற்றியினால் பாஜக செல்வாக்கு சரிந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பீகார், கர்நாடகம், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் 11 இடங்களில் காங்கிரஸ் வெற்றி இலக்கை எட்டியுள்ளது. மேலும் சில இடங்களில் பாஜகவும் இதர கட்சிகளும் முன்னிலையில் இருக்கின்றன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டிருக்கும் பாஜகவுக்கு இந்த தேர்தல் முடிவு மிகப்பெரிய சரிவை தந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் 4 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
அந்த முடிவுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கு இன்று வெளியாகும் இடைத்தேர்தல் முடிவு கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதி என்பது வேறு. ஆட்சி செய்வது என்பது வேறு என்பதை பாஜக இப்போது உணர்ந்திருக்கும்.
கடந்த தேர்தலில் மக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினார்கள். அதில் சிறிதளவாவது நிறைவேற்றாவிட்டால் வரும் காலத்தில் மிகப்பெரிய சரிவை சந்திக்க வேண்டியதிருக்கும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications