ஜெ. வழக்கில் அப்பீல்: சு.சாமி பேச்சுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை.. டாக்டர் தமிழிசை
நாகர்கோவில்: ஜெயலலிதா வழக்கில் கர்நாடக அரசு அப்பீல் செய்யாவிட்டால் நான் செய்வேன் என்று சுப்பிரமணியம் சாமி கூறியிருப்பது பாஜகவின் கருத்து அல்ல, அது சாமியின் சொந்தக் கருத்து என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
நாகர்கோவில் வந்த தமிழிசை அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விடுதலைக்கும், பாஜக.கவுக்கும் தொடர்பு இருப்பதாக பலரும் யூகிக்கிறார்கள். பாஜக ஊழல் இல்லாத இயக்கம். வழக்கில் தலையிடும் பழக்கம் எங்களுக்கு இல்லை. இந்த தீர்ப்பு எதிர்பாராத தீர்ப்பு என்பது அனைவரும் அறிந்ததுதான். ஏதாவது ஒரு தண்டனையோ அல்லது கண்டனமோ இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி எதுவும் இல்லாமல் எதிர்பாராத தீர்ப்பாக அமைந்து விட்டது. ஆனாலும் தீர்ப்பை மதிக்க வேண்டும். அதனால்தான் நான் வாழ்த்து சொன்னேன். பிரதமர் நரேந்திரமோடியும் வாழ்த்து சொன்னார். இதுதான் அரசியல் நாகரீகம்.

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்புக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். விடுதலை ஆனதால் அவருக்கு நிம்மதி கிடைத்துள்ளது. நான் ஏற்கனவே கூறியதுபோல, அந்த நிம்மதி தமிழக மக்களுக்கும் கிடைக்க வேண்டும். தமிழகம் ஊழல் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும்.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால், தான் மேல்முறையீடு செய்யப்போவதாக சுப்பிரமணியசாமி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து. இதற்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து இருக்கிறது. இதுவரை 40 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். இன்னும் 3 மாதங்கள் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்த உள்ளோம்.
சட்டசபைத் தேர்தலைப் பொறுத்தவரை அந்தத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. கூட்டணியில் தற்போதுள்ள சில கட்சிகள் வெளியே போகலாம், சில கட்சிகள் உள்ளே வரலாம். தேர்தல் நேரத்தில் தேசிய தலைமையுடன் இணைந்து அதை தீர்மானித்து முடிவு செய்வோம் என்றார் தமிழிசை.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்?












Click it and Unblock the Notifications