ஜெ. விடுதலைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: தமிழிசை
கன்னியாகுமரி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுதலையானதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் எந்த தொடர்புமில்லை என்று அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தக்கலை அருகே உள்ள குமாரபுரம் பூவங்காபறம்பு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் 5008 பொங்கல் விழாவை தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவின் விடுதலைக்கும், பாஜகவிற்கும் தொடர்பு தொடர்பு இருப்பதாக கூறுவது வெறும் ஊகமே என்றார்.

ஒரு வழக்கில் தலையிடும் பழக்கம் பா.ஜ.க.வுக்கு இல்லை. ஜெயலலிதா வழக்குக்கும், தீர்ப்புக்கும், பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி மீண்டும் முதல்வராக பதவியேற்க ஜெயலலிதாவிற்கு நிம்மதி கிடைத்திருப்பது போல் தமிழக மக்களுக்கும் நிம்மதி கிடைக்க வேண்டும். இனியாவது தமிழகம் ஊழல் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும்.
ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்ட வழக்கில், கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யாவிட்டால் தான் மேல்முறையீடு செய்யப் போவதாக சுப்பிரமணியசாமி கூறியிருப்பது அவரது சொந்த கருத்து என்றும் தமிழிசை கூறினார்.
2016 சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று இன்னும் முடிவு எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் தேசிய தலைமையுடன் இணைந்து கூட்டணி குறித்து முடிவு எடுப்போம் என்று கூறிய அவர், தமிழகத்தில் பாஜக 40 லட்சம் உறுப்பினர்களை சேர்த்துள்ளது. இன்னும் 3 மாதத்தில் மக்கள் தொடர்பு இயக்கம் நடத்த உள்ளோம் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications