குதிரையோ, கழுதையோ.. சவாரி செய்ய யாராவது ஒருத்தர் இருந்தா போதும்.. இது பாஜக திட்டம்!
தமிழகத்தில் ஆட்சி செய்ய தனக்கு ஆதரவான யாராவது இருந்தால் போதும் என பாஜக எண்ணி வருகிறது.
சென்னை: தமிழகத்தில் அதிமுக அரசே நீடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இதுவரை தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என கூறியவர்கள் தற்போது அதிமுக அரசு மீது கரிசனம் காட்டுவது எதற்கு ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இதுதான் சமயம் எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விடவேண்டும் என பாஜக முயன்று வருகிறது. மத்தியில் ஆளும் கட்சி என்பதால் பாஜகவுக்கு இதற்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைத்து வருகிறது.
ஆரம்பத்தில் அப்போதைய முதல்வர் ஓ பன்னீர்செல்வத்துடன் இணக்கமாக இருந்து பாஜக அரசு காய்நகர்த்தி வந்தது. இதையடுத்து கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் மற்றும் பிளவுகளை தொடர்ந்து தற்போது எடப்பாடி அரசுடனும் இணக்கம் காட்டி வருகிறது.

மாநில அரசுகளை கட்டுப்படுத்தி..
அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுக்கு பாஜக தான் காரணம் என கூறப்பட்டது. மேலும் தனக்கு எதிராக செயல்படும் மாநில அரசுகளை வருமான வரித்துறை, சிபிஐ என ரெய்டுகளை அவிழ்த்துவிட்டு ஒரு கலவரத்துடனேயே கட்டுப்படுத்தி வருகிறது.

முன்கூட்டியே கணிக்கும்..
தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்றும் காலூன்றும் என்றும், விரைவில் தேர்தல் வரும் என்றும் கூறுவதை அக்கட்சி நிர்வாகிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அக்கட்சியின் நிர்வாகிகள் முன்கூட்டியே கணித்த பல விஷயங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.

மத்திய அரசு மீது கோபம்
இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் விருப்பம் என பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மாட்டுக்கறி தடை உள்ளிட்ட விவகாரங்கள் மத்திய அரசு மீது பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே உள்ளவர்கள் மீது சவாரி
இதனால் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஏற்கனவே உள்ளவர்கள் மீது சவாரி செய்யலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளதா பாஜக? தமிழகத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும், காலூன்றும் என்று கூறியவர்கள் திடீரென அதிமுக அரசே நீடிக்க வேண்டும் என்பதன் பின்னணி என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications