அரசியல் கட்சிகளை கூட்டணிக்காக நட்பு ரீதியில் சந்தித்து வருகிறது பாஜக - தமிழிசை
சென்னை: தமிழகத்தில் வரவிருக்கின்ற சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி குறித்து அரசியல் கட்சி தலைவர்களை பாஜக நட்பு ரீதியில் சந்தித்து வருவதாக அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆவடியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். தமிழகத்தின் பாஜகாவின் அடிப்படை கட்டமைப்பு உறுதிப்படுத்தும் வகையில் 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளை 6 ஆயிரம் பகுதிகளாக பிரித்து 600 நிர்வாகிகள் சுற்றுப்பயணம் செய்து வருவதாக கூறினார்.

கூட்டணி கட்சி தலைவர்களுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நட்பு ரீதியில் நடைபெற்று வருவதாகவும் மேலிடத்தின் அறிவுறுத்தலின் படி அடுத்தக்கட்ட சந்திப்புகள் விரைவில் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் இருந்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பிரதமர் மோடி உள்ளிட்டோர் தமிழகம் வர உள்ளதாக தமிழிசை தெரிவித்தார். தேர்தலை சந்திக்க பாஜக தயாராக உள்ளது என தெரிவித்த அவர் பாஜக சார்பில் விரைவில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications