ஆளுநரை மரியாதை நிமித்தமாகவே சு.சாமி சந்தித்தார்: ராஜ்பவன் விளக்கம்

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி ஆளுநரை இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி இன்று மாலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக சசிகலா வரக்கூடாது என பெரும்பாலான மக்கள் கருத்து கூறி வரும் வேளையில் சசிகலாவுக்கு ஆதரவாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி செயல்பட்டு வருகிறார். சசிகலாவை முதல்வராக பதவியேற்க வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதை விமர்சனம் செய்திருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

BJP MP Subramanian Swamy Meets Governor Vidyasagar Rao

இதனிடையே தமிழக அரசியலிலும், தமிழக பிரச்சனைகளிலும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை கூறி தமிழர்களின் கண்டனங்களை அடிக்கடி பெற்று வரும் சுப்பிரமணியன் சுவாமி தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

கிண்டி ராஜ்பவன் ஆளுநர் மாளிகையில் சுமார் 30 நிமிடங்களாக இந்த ஆலோசனை நடைபெற்றது. இந்நிலையில் பாஜக எம்.பி. ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசியது மரியாதை நிமித்தமானது என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+