காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்வாக்கு உள்ள ஒரே கட்சி காங்.தான். -ஞானதேசிகன்
காஞ்சிபுரம்: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்வாக்கு உள்ள ஒரே கட்சி காங்கிரஸ் மட்டும்தான். எங்களுக்கு எப்போதுமே பாஜக ஒரு போட்டியே இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
காஞ்சீபுரம் நாயக்கன்பேட்டைக்கு வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

காங்கிரசுக்கு எப்போதுமே பா.ஜ.க போட்டியே இல்லை. அவ்வாறு நாங்களும் நினைக்கவில்லை.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகளை வைத்து பா.ஜ.க காங்கிரசுக்கு போட்டியாக உருவெடுத்து உள்ளதாக யாரும் நினைக்க வேண்டாம். அவர்களுக்கு வடக்கே குறிப்பிட்ட சில மாநிலங்களை தவிர மற்ற பகுதிகளில் செல்வாக்கு இல்லை.
அதேபோல தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு ஆதரவே இல்லை. மோடி பெயரை கூறிக்கொண்டு கர்நாடகாவில் அவர்களால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அங்கு காங்கிரஸ்தான் ஆட்சியை பிடித்து உள்ளது.
ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை செல்வாக்கு பெற்ற ஒரே கட்சி, காங்கிரஸ் மட்டும்தான் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications