அதிமுகவை உடைக்க பாஜக சதி: மதுசூதனன் பரபரப்பு குற்றச்சாட்டு!
அதிமுகவை உடைக்க பாஜக சதி செய்வதாக அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை: அதிமுகவை உடைக்க பாரதிய ஜனதா கட்சி சதி செய்வதாக அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
ஜெயலலிதாவை மறைவைத் தொடர்ந்து நீங்கள்தான் அதிமுக பொதுச்செயலராக வேண்டும் என்று முதலில் சசிகலாவிடம் இருகரம் கூப்பி கெஞ்சி கேட்டவர் மதுசூதனன். வடசென்னையில் நேற்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் மதுசூதனன் பேசியதாவது:

1987ல் எம்.ஜி.ஆர். இறந்தபோது அதிமுகவுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் ஜெயலலிதா அதிமுகவை மீட்டெடுத்தார்.
தற்போது வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையுடன் இருந்து சின்னம்மாவை ஆதரிக்க வேண்டும். சிலர் பதவி வெறியோடு உள்ளார்கள். சின்னம்மாவுக்கு அந்த ஆசை இல்லை.
நான்தான் முதலில் அவர்களை பொதுச்செயலாளராக பதவி ஏற்கும்படி கேட்டுக்கொண்டேன். சசிகலாவை எதிர்ப்பவர்கள் உண்மையான அதிமுகவினராக இருக்க முடியாது.
மத்திய பாஜக அதிமுகவை உடைக்க நினைக்கிறது. எனவே, நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு மதுசூதனன் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications