தமிழர் பண்பாட்டை ஒழித்து கட்ட முயற்சிக்கும் பாஜக... தமிழருக்கு பொதுவிடுமுறையே இருக்க கூடாதா?
தமிழருக்கு பொதுவிடுமுறை இருக்கக் கூடாது என்ற வெறியோடு மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. இதன்வெளிப்பாடாக பொங்கலுக்கு பொதுவிடுமுறையே இல்லை என அறிவித்திருக்கிறது மத்திய அரசு.
சென்னை: தமிழர் பண்பாட்டை ஒழித்து கட்டும் வேலையில் மத்திய பாஜக அரசு பகிரங்கமாக இறங்கியுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு பொதுவிடுமுறையை ரத்து செய்திருப்பதன் மூலம் தமிழினத்துக்கு ஒரு பொதுவிடுமுறை கூட இல்லை என்கிற இழிநிலையை மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ளது.
இந்தியாவின் நாடாளுமன்றம் ஓணம் பண்டிக்கைக்கு விடுமுறை விடப்படுகிறது. வட இந்தியர்கள் கொண்டாடும் சங்கராந்திக்கு பொதுவிடுமுறை உண்டாம்.

ஆனால் தமிழினத்தின் ஒரே ஒரு பண்பாட்டு திருவிழாவானா பொங்கல் திருநாளுக்கு இனி பொதுவிடுமுறையே இல்லையாம். தமிழர்களின் முதுகில் குத்தியே பழக்கப்பட்டுப் போன பாரதிய ஜனதா அரசின் இந்த நடவடிக்கை தமிழகத்தை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்று வந்த ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு தமிழரின் பண்பாட்டு அடையாளம். கடந்த 2 ஆண்டுகாலமாக இந்த பண்பாட்டு அடையாள நிகழ்வை நடத்தவிடாமல் மத்திய அரசு முடக்கி வைத்திருக்கிறது.
இப்போது பொங்கல் பண்டிகையையே ஒழிக்கும் வகையில் பொதுவிடுமுறை இல்லை என அறிவித்துள்ளது மத்திய பாஜக அரசு. அப்படியானால் தமிழ் இனத்துக்கு என ஒரு பொதுவிடுமுறையே இல்லையா? தமிழர்களுக்கு என ஒரு பண்பாட்டு அடையாளமே இல்லையா? என்ற கொந்தளிப்பை உருவாக்கியிருக்கிறது மத்திய பாஜக அரசு.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தமிழக இளைஞர்கள் ஆர்த்தெழுந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். இப்போது பொங்கல் பண்டிகையையே ஒழித்து தமிழர் தேசிய திருவிழாவை அழித்துவிட பாஜக கங்கணம் கட்டிக் கொண்டிருப்பது வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுகிற நடவடிக்கையே.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications