அதான், முதல் சுற்று முடிவுலயே தெரியுதே... தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி டுவீட்!
ஆர்கேநகர் முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவீட்டியுள்ளார்.
Recommended Video
சென்னை : ஆர்கே நகரில் பணப்பட்டுவாடா நடப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன், முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடத்திருப்பதை காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவா, அல்லது அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட தினகரனுக்கா மக்களின் ஆதரவு என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இருந்து வருகிறது. ஆளும் கட்சி ரூ. 120 கோடி வரை பணப்பட்டுவாடா செய்ததாக தினகரன் குற்றம் சாட்டினார்.
தினகரன் தரப்பு நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்ததாக பாஜக குற்றம் சாட்டியது. இதோடு பலருக்கு தினகரனின் சின்னமான குக்கர் பரிசாக அளிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் இன்றைய தேர்தல் முடிவுகளுமே முதல் சுற்றில் தினகரன் ஏறத்தாழ 3 ஆயிரம் வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக தெரிகிறது.
ஆர்கேநகர் முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) December 24, 2017
இதனிடையே ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் ஆர்கேநகர் முதல் சுற்று முடிவுகள் ஓட்டு விற்பனை வெற்றிகரமாக நடந்திருப்பதை காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.