லேப்டாப்பும் கையுமாக திரியும் பாஜகவினர்- மோடி கூட்டத்துக்கு ஆட்களைப் பதிவு செய்கிறார்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி திருச்சியில் பங்கேற்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்புவோரின் வசதிக்காக கையில் லேப்டாப்புடன் பாஜகவினர் குழுக் குழுவாக சென்னையில் பொது இடங்களில் முகாமிட்டுள்ளனர். கூட்டத்திற்கு வர விரும்புவோரின் பெயர்களை அங்கேயே ஆன்லைனில் பதிவு செய்கின்றனர்.

பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக திருச்சி பொன்மலையில் நடைபெறும் கூட்டத்திற்காக தமிழகம் வருகிறார் மோடி. இளந்தாமரைக் கூட்டம்என்று இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

கூட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கி உள்ளன. மாநில முழுவதிலும் இருந்து விண்ணப்பம் மற்றும் ஆன்-லைன் மூலம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் பூங்காக்கள், மெரீனா கடற்கரையில் நடை பயிற்சிக்கு வருபவர்களிடம் திருச்சி மாநாட்டுக்கு வரும்படி அழைத்து துண்டு பிரசுரங்கள் வழங்கினார்கள். கையில் லேப்-டாப்பும் வைத்து இருக்கிறார்கள். மாநாட்டுக்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்தவர்களுக்கு உடனடியாக பெயர் பதிவு செய்யப்பட்டது.

இதே போல் கல்லூரி வாசல்களிலும் லேப்-டாப்புடன் நின்றபடி மாநாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்த மாணவர்களின் பெயர்கள் ஆன்-லைனில் பதிவு செய்யப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+