தமிழகத்தில் காலூன்ற பாஜக கையிலெடுக்கும் "பலவீன" அரசியல்'!
தமிழகத்தில் காலூன்ற கட்சிகளை பலவீனப்படுத்தும் அரசியலை கையிலெடுத்து வருகிறது பாஜக.
சென்னை: தமிழகத்தில் காலூன்றுவதற்காக கட்சிகளை பலவீனப்படுத்துகிற அரசியலை தொடர் யுக்தியாக பாஜக கையிலெடுத்து வருகிறது. தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் குறி வைத்து காய்கள் நகர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவை முழுமையாக கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது பாஜக. அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் என்னதான் பாஜகவை குறை கூறினாலும் தினகரன் வெளிப்படையாக பாஜகவை எதிர்க்கவில்லை.
இந்த அரசியல் விளையாட்டுகளுடன் ஆள்பிடி விளையாட்டு, கட்சிகளை வழக்குகள் மூலம் மிரட்டுதல் என திரைமறைவு வேலைகளையும் கன கச்சிதமாக அடுத்தடுத்து பாஜக செய்து வருகிறது. பாமகவில் இருந்து விலக்கப்பட்ட வடமாவட்ட பிரமுகர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வடதமிழக பிரமுகர்
வட தமிழகத்தில் சென்னையை ஒட்டிய அந்த மாவட்டத்தில் அந்த பிரமுகருக்கு நல்ல செல்வாக்கு. அமித்ஷா தமிழகம் வரும்போது அவர் சேருவதாக இருந்தது. தற்போது அது தள்ளி போயுள்ளது.

சிறுத்தை பிரமுகர்
இதேபோல் சிறுத்தைகள் கட்சியில் இருந்து வெளியே போன பெரிய பிரமுகரையும் வளைத்துள்ளது பாஜக. அவரிடம் சிறுத்தைகளின் பலம் என்ன? தொண்டர்களின் புழுக்கம் என்ன? என விரிவாக கேட்டிருக்கிறது.

வழக்குகள் வாபஸ் ஆனால்...
சிறுத்தைகள் மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை ஆட்சியாளர்களிடம் பேசி திரும்பப் பெற தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் நீண்டகால மனப் புழுக்கம். இதை தமிழக அரசு சரி செய்து கொடுத்தால் இதை காரணம் காட்டியே ஏராளமான சிறுத்தைகளை வரவழைக்கலாம் என பெரிய பிரமுகர் ஐடியா கொடுத்திருக்கிறாராம்.

பலவீன அரசியல்
பாஜக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்திய பிக்பாஸும், இது பிரச்சனை இல்லை.. பார்த்து கொள்ளலாம்.. பேசிவிட்டு சொல்கிறேன். இப்படி கட்சிகளை பலவீனப்படுத்துகிற பாஜகவின் அரசியலாவது கை கொடுக்குமா? என்பது விரைவில் தெரிய வரும்.












Click it and Unblock the Notifications