பாஜக உறுப்பினர் சேர்க்கை இன்னும் 1 மாத காலம் நீடிக்கும் – தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை: பாஜக உறுப்பினர் சேர்க்கை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று நடந்தது. டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
அனைத்து மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், மாவட்ட அமைப்பு செயலாளர்கள், உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்கள், அணிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவர், "தமிழகத்தில் இதுவரை 31 லட்சம் உறுப்பினர்கள் மிஸ்டுகால் மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர். நாங்கள் 60 லட்சம் பேர் சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
கடந்த மாதம் 30 ஆம் தேதியுடன் உறுப்பினர் சேர்க்கை முடிவடைவதாக இருந்தது. பல மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று இந்த மாதம் இறுதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே அதிகப்படியான உறுப்பினர்களை சேர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் பற்றி கூட்டத்தில் விவாதித்து முடிவெடுத்துள்ளோம். அதன்படி இந்த மாதம் உறுப்பினர் சேர்க்கை மேலும் தீவிரப்படுத்தப்படும்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications