கோவையில் ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி... 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோவையில் ரத்த தான சைக்கிள் பேரணி நடைபெற்றது.
கோவை: கோவையில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ரத்த தான சைக்கிள் பேரணி நடைபெற்றது.
வருகிற ஜூன் 14 ஆம் தேதி உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள அன்னை கரங்கள் நலசங்கம் சார்பில் இன்று ரத்த தான சைக்கிள் பேரணி நடைபெற்றது.

உலக ரத்ததான தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14-ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஷ்டிக்கப்படுகின்றது. ரத்தப் பிரிவுகளான A, B, O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலேயே இந்த தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இன மத மொழி வேறுபாடின்றி உலகெல்லாம் வாழும் அனைத்து மக்களும் மாற்றுக்கருத்தின்றி ஏகமனதாக ஏற்றுக்கொண்ட ஒரே ஒரு தானம் ரத்த தானமாகும். இதனை வலியுறுத்தியே ரத்த தான தினத்தை முன்னிட்டு, இதற்காக உலகின் பல பகுதிகளில் பல்வேறு முகாம்கள், விழிப்புணர்வு பேரணிகள், பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி, கோவையில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட போக்குவரத்து ஆணையர் சுஜித்குமார் துவக்கி வைத்தார். நேரு விளையாட்டு அரங்கம் முதல் பாப்பநாயக்கன்பாளையம் வரை இந்த சைக்கிள் பேரணி நடைபெற்றது.
பேரணியில் சுமார் 500க்கும் மேற்போட்டோர் கலந்துகொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரத்த தானம் உயிர் தானம், தானங்களில் சிறந்தது ரத்த தானம், அனைவருக்கும் ரத்த தானம் செய்வோம் உயிரிழப்பை தவிர்ப்போம் என்ற பெயரில் பதாகைகளை ஏந்தி சென்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications