ரத்தம் குடித்து அச்சுறுத்திய குரங்கு பிடிபட்டது... திருவாரூர் மக்கள் மகிழ்ச்சி
திருவாரூர்: நள்ளிரவில் ஆடு, கோழிகளை கொன்று ரத்தம் குடித்து வந்த குரங்கை திருவாரூர் மாவட்ட வனத்துறையினர் பிடித்து கிராம மக்களின் அச்சத்தைப் போக்கியுள்ளனர்.
திருவாரூர் அருகே எண்கண் என்ற கிராமத்தில், கடந்த சிலவாரங்களாக மர்ம விலங்கு ஒன்று அச்சுறுத்தி வந்தது. திடீர் திடீரென நாய், ஆடு, கோழிகள் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்துகிடந்தன. மர்ம விலங்கு ஒன்று ஆடு, கோழிகளை கொன்று ரத்தம் குடித்தது கண்டு கிராம மக்கள் அச்சமடைந்தனர். ஊர்மக்களை அச்சுறுத்திய அந்த விலங்கு ஒரு குரங்கு என பின்னர் தெரியவந்தது.

விலங்குகளை கடித்த குரங்கு திடீரென ஊரில் உள்ள பெண்களை துரத்தவும் தொடங்கியது. இதனையடுத்து கிராம மக்கள் திருவாரூர் மாவட்ட வனத்துறைக்கு புகார் அளிக்கவே, குரங்கிற்கு பிடித்தமான கோழி முட்டைகளை உடைத்து ஒரு தட்டில் ஊற்றி, பொது இடத்தில் வைத்து வனத்துறையினர் காத்திருந்தனர். அப்போது எதிர்பார்த்தபடி வந்த குரங்கை லாகவமாக பிடித்தனர். தங்கள் கிராமத்தை பீதியில் ஆழ்த்திய குரங்கு பிடிபட்டதில் கிராம மக்கள் பெரும் நிம்மதி அடைந்தனர். குரங்கை பிடிக்கும் குழுவில் பணியாற்றிய வன ஊழியர்கள் செல்வம், கல்யாணம் உள்ளிட்டவர்களுக்கும் கிராமமக்கள் நன்றி தெரிவித்தனர்.
குரங்குகள் பழங்கள்தான் சாப்பிடும். ஆனால் இந்த குரங்கு ரத்தம் குடிக்கும் வகையயை சேர்ந்தது. இது எங்களுக்கே அதிர்ச்சியாதான் இருக்கு. பிடிபட்ட குரங்கை கொண்டு சென்று காட்டுப்பகுதியில் விட்டுவிடுவோம் என்றார் ரேஞ்சர் தனபாலன். திருவாரூர் மாவட்ட எல்லைக்குள் குரங்கு, பாம்பு தொல்லைகள் இருந்தால் மாவட்ட வன அலுவலகத்தை அணுகலாம். நேரிடையாக புகார் அளிக்க முடியவில்லையென்றால் 97892-75747 என்ற எண்ணில் தொடர்பு கொண்டும் புகார் அளிக்கலாம்' என்றும் ரேஞ்சர் தனபாலன் கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications