மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டடத்தை சுற்றியுள்ள நாய் குட்டிகளை பத்திரமாக மீட்டது புளுகிராஸ்
மவுலிவாக்கத்தில் இடிக்கப்பட உள்ள 11 அடுக்குமாடி கட்டடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த 3 நாய்கள் மற்றும் 11 நாய்க்குட்டிகளை புளு கிராஸ் அமைப்பினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டிடம் நாளை இடிக்கப்படவுள்ளதால், அந்த பகுதியைச் சுற்றி இருந்த 3 நாய்கள் மற்றும் 11 நாய்க்குட்டிகளை புளு கிராஸ் அமைப்பினர் பத்திரமாக மீட்டனர்.
சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள 11 மாடி கட்டடம் நாளை இடிக்கப்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகங்கள், ஆம்புலன்ஸ் வண்டிகள் அங்கு நிறுத்தப்படவுள்ளன. அதேபோல், அருகிலிருக்கும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, மவுலிவாக்கத்தில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த பணிகள் நடைபெறும் போது அங்கு வாழும் விலங்கினங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் சிகிச்சை அளிக்கவும் புளு கிராஸ் அமைப்பினர் மவுலிவாக்கத்தில் முகாமிட்டுள்ளனர். மேலும், புளுகிராஸ் பொது மேலாளர் ஜான் வில்லியம் தலைமையிலான குழுவினர். அந்த பகுதியைச் சுற்றி இருந்த 3 நாய்கள் மற்றும் 11 நாய்க்குட்டிகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
நாளை கட்டடம் இடிக்கும் பணிகள் தொடங்கி முடியும் வரை கண்காணிக்கும் பணியில் ஈடுபட உள்ளதாக அந்த அமைப்பின் பொது மேலாளர் ஜான் வில்லியம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications