மற்ற பெட்டிகளுடன் மீண்டும் தனது பயணத்தை தொடங்கியது கவுகாத்தி ரயில்
சென்னை: குண்டு வெடித்த கவுகாத்தி ரயில் பலத்தப் பாதுகாப்புடன் மீண்டும் கவுகாத்தி புறப்பட்டுச் சென்றது.
இன்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடித்தது. சென்னை வந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய சுவாதி என்ற பெண் உயிரிழந்துள்ளர்.

மேலும் படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குண்டுவெடித்த கவுகாத்தி ரயில் சென்னையிலிருந்து மீண்டும் 12 மணியளவில் புறப்பட்டது. விசாரணைக்காக குண்டுவெடித்த ரயில் பெட்டிகள் சென்னையில் நிறுத்தப்பட்டது. அது தவிர மற்ற பயணிகளுடன் பலத்த பாதுகாப்புடன் ரயில் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications