மதுரை அண்ணாநகரில் பள்ளி - கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை அண்ணாநகர் பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நேற்று காலை போலீசாருக்கு செல்போனில் பேசிய மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அண்ணாநகரில் உள்ள பெண்கள் கல்லூரி மகாத்மாகாந்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, புஸ்கோஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி மற்றும் சாத்தமங்கலம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மர்ம நபர் தொலைபேசி மூலம் மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.

bomb Threat for madurai schools and colleages

இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் போலீசார் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் கருவி ஆகியவற்றுடன் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையால் கல்லூரி-பள்ளிகளில் பரபரப்பு ஏற்பட்டது. கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு வந்த மாணவ-மாணவிகள் வெளியேற்றப்பட்டு தீவிர சோதனை நடந்தது. சுமார் 2 மணி நேர சோதனைக்கு பின்னர் புரளி என்று தெரியவந்தது. இதையடுத்து கல்லூரிக்குள் மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.

அண்ணாநகர் தனியார் பள்ளியில் வெடிகுண்டு சோதனையை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மாணவிகளை பெற்றோர் அழைத்து சென்றனர். மற்ற 3 பள்ளிகளிலும் சோதனைக்கு பின்னர் புரளி என்று தெரியவந்ததால் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+